நாளைக்கு இந்தியா வல்லரசாகப் போகிறது
எல்லா தேசத்து அதிபர்களுக்கும்
சொல்லப் படுவது
என்னவென்றால்
எங்கள் மண்ணில்
குப்பை கொட்டுவதை
நிறுத்துங்கள்.
இந்த உத்தரவு
இந்த நிமிசம் முதல்
அமல் படுத்தப்படும்.
வாக்கரிசி(ரேசன் அரிசி)
நுகர்வோர்
கூட்டுறவுக் கடையில்
கொள்ளை மலிவு
அரிசி.
மூன்று வேளையும்
நாங்கள்
நெல்லுச் சோறு தின்கிறோம்.
எங்கள் வயிறெல்லாம்
அழகான தொப்பை.
நெல்லுச் சோறும்
வடி தண்ணியும்
கொட்டிக் கிடக்கு கால்வாய்களில்
பெருச்சாளிகள்
ஆனந்தமாய் நீச்சலடிக்கின்றன.
தாம்பாளம்
சிந்தச் சிந்த
வாக்கரிசி கொண்டுபோகிறார்கள்
பெண்கள்
எளவு வீட்டுக்கு.
மணல்
எதை
உற்பத்தி செய்தோம்
நாம்.
ஆறுகளில்
மணல் இருக்கிறது..
விவசாயிகளிடம்
நிலம் இருக்கிறது.
மணலையும்
நிலத்தையும்
விற்காமல்
எதை விற்பது..!
Monday, October 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment